குறள் 484

குறள் 484:

 

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்
மு.வ உரை:
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
சாலமன் பாப்பையா உரை:
ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.
கலைஞர் உரை:

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.


Kural 484


Gnaalam Karudhinung Kaikoodung Kaalam
Karudhi Idaththaar Seyin

Kural Explanation: Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place

Leave a Comment