குறள் 483

குறள் 483:

 

அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்
மு.வ உரை:
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
சாலமன் பாப்பையா உரை:
செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?
கலைஞர் உரை:

தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.


Kural 483


Aruvinai Yenba Ulavo Karuviyaan
Kaalam Arindhu Seyin

Kural Explanation: Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?

Leave a Comment