குறள் 531

குறள் 531:

 

இறந்த வெகுளியின் தீதே சிறந்த 
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
மு.வ உரை:
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.
கலைஞர் உரை:

அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.


Kural 531


Irandha Veguliyin Theedhae Sirandha
Uvagai Magizhchchiyir Sorvu

Kural Explanation: More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy

1 thought on “குறள் 531”

  1. திருக்குறளின் மு.வ உரை சரியாக புரியவில்லை. சில குறல்களின் விளக்கவுரை மூன்று பேரும் வெறுபடுகின்றனர். இந்த மூவரை தவிர வேறு ஒருவர் எழுதிய மக்களுக்கு புரியுமாறு இருகஜும் விளக்கவுரையை பதிவிட்டால் நலம்

    Reply

Leave a Comment