குறள் 39

குறள் 39:

 

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
மு.வ உரை:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
சாலமன் பாப்பையா உரை:
அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.
கலைஞர் உரை:

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.


Kural 39


Araththaan Varuvadhae Inbam Mattrellaam
Puraththa Pugazhum Ila

Kural Explanation: Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise

Leave a Comment