குறள் 40

குறள் 40:

 

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
மு.வ உரை:
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.
கலைஞர் உரை:

பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.


Kural 40


Seyarpaala Thorum Aranae Oruvarku
Uyarpaala Thorum Pazhi

Kural Explanation: That is virtue which each ought to do, and that is vice which each should shun

Leave a Comment