குறள் 1176

குறள் 1176:

 

ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது
மு.வ உரை:
எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!
சாலமன் பாப்பையா உரை:
எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.
கலைஞர் உரை:

ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!


Kural 1176


Oo Inidhae Emakkinnoi Seidhakan
Thaaam Idhar Pattadhu

Kural Explanation: The eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh! I am much delighted.

Leave a Comment