குறள் 1175

குறள் 1175:

 

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்
காமநோய் செய்தவென் கண்
மு.வ உரை:
அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.
கலைஞர் உரை:

கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன.


Kural 1175


Padalaatraa Paidhal Ulakkum Kadalaatraa
Kaanoi Seidhaen Kan

Kural Explanation: Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness.

Leave a Comment