குறள் 1073

குறள் 1073:

 

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
மு.வ உரை:
கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை:
தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.
கலைஞர் உரை:

புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.


Kural 1073


Thevar Anaiyar Kayavar Avarundhaam
Mevana Seidhozhuga Laan

Kural Explanation: The base resemble the Gods; for the base act as they like

Leave a Comment