குறள் 1074

குறள் 1074:

 

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் 
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்
மு.வ உரை:
கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.
கலைஞர் உரை:
பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்.

Kural 1074


Agappatti Aavaaraik Kaanin Avarin
Migappattuch Chemmaakkum Keezh

Kural Explanation: The base feels proud when he sees persons whose acts meaner than his own

Leave a Comment