குறள் 970

குறள் 970:

 

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு
மு.வ உரை:
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.
கலைஞர் உரை:

மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.

Kural 970


Ilivarin Vaazhaadha Maanam Udaiyaar
Olidhozhudhu Eththum Ulagu

Kural Explanation: The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity

Leave a Comment