குறள் 947

குறள் 947:

 

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்
மு.வ உரை:
பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.
கலைஞர் உரை:

பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.


Kural 947


Theeyala Vandri Theriyaan Peridhunnin
Noyala Vindrip Padum

Kural Explanation: He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health)

Leave a Comment