குறள் 877

குறள் 877:

 

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து
மு.வ உரை:
துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.
கலைஞர் உரை:

தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.


Kural 877


Novarka Nondhadhu Ariyaarkku Mevarka
Menmai Pagaivar Agaththu

Kural Explanation: Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes

Leave a Comment