குறள் 830

குறள் 830:

 

பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீஇ விடல்
மு.வ உரை:
பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.
கலைஞர் உரை:

பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.


Kural 830


Pagainatpaam Kaalam Varungaal Muganattu
Aganatpu Oreei Vidal

Kural Explanation: When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former)

Leave a Comment