குறள் 669

குறள் 669:

 

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை
மு.வ உரை:
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.
கலைஞர் உரை:

இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.


Kural 669


Thunbam Uravarinum Seiga Thunivaatri
Inbam Payakkum Vinai

Kural Explanation: Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end)

Leave a Comment