குறள் 485

குறள் 485:

 

காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்
மு.வ உரை:
உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
சாலமன் பாப்பையா உரை:
பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.
கலைஞர் உரை:

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.


Kural 485


Kaalam Karudhi Iruppar Kalangaadhu
Gnaalam Karudhu Bavar

Kural Explanation: They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world

Leave a Comment