குறள் 477

குறள் 477:

 

ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி
மு.வ உரை:
தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.
சாலமன் பாப்பையா உரை:
எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.
கலைஞர் உரை:

வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.


Kural 477


Aatrin Aravarindhu Eega Adhuporul
Potri Vazhangu Neri

Kural Explanation: Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property

Leave a Comment