குறள் 1289

குறள் 1289:

 

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்
மு.வ உரை:
காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.
சாலமன் பாப்பையா உரை:
காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே.
கலைஞர் உரை:

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.


Kural 1289


Malarinum Mellidhu Kaamam Silaradhan
Sevvi Thalaippadu Vaar

Kural Explanation: Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature

Leave a Comment