குறள் 1233

குறள் 1233:

 

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்
மு.வ உரை:
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.
கலைஞர் உரை:

தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.


Kural 1233


Thanandhamai Saala Arivippa Polum
Manandhanaal Veengiya Thol

Kural Explanation: The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public)

Leave a Comment