குறள் 1227

குறள் 1227:

 

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்
மு.வ உரை:
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.
கலைஞர் உரை:

காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.


Kural 1227


Kaalai Arumbip Pagalellaam Podhaagi
Maalai Malarumin Noi

Kural Explanation: This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening

Leave a Comment