குறள் 1217

குறள் 1217:

 

நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது
மு.வ உரை:
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?
சாலமன் பாப்பையா உரை:
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?
கலைஞர் உரை:

நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?


Kural 1217


Nanavinaan Nalkaak Kodiyaar Kanavinaan
Enemmaip Peezhip Padhu

Kural Explanation: The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?

Leave a Comment