குறள் 1203

குறள் 1203:

 

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்
மு.வ உரை:
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?
சாலமன் பாப்பையா உரை:
எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?
கலைஞர் உரை:

வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?


Kural 1203


Ninaippavar Pondru Ninaiyaarkol Thummal
Sinaippadhu Pondru Kedum

Kural Explanation: I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not

Leave a Comment