குறள் 1185

குறள் 1185:

 

உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது
மு.வ உரை:
அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?
கலைஞர் உரை:

என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்.


Kural 1185


Uvakkaanem Kaadhalar Selvaar Ivakkaanen
Meni Pasappoor Vadhu

Kural Explanation: Just as my lover departed then, did not sallowness spread here on my person ?

Leave a Comment