குறள் 1178

குறள் 1178:

 

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்
மு.வ உரை:
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!
கலைஞர் உரை:
என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!

Kural 1178


Penaadhu Pettaar Ularmanno Matravark
Kaanadhu Amaivila Kan

Kural Explanation: He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.

Leave a Comment