குறள் 1147

குறள் 1147:

 

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்
மு.வ உரை:
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.
கலைஞர் உரை:

ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.


Kural 1147


Ooravar Kelavai Eruvaaga Annaisol
Neeraaga Neelumin Noi

Kural Explanation: This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother

Leave a Comment