குறள் 1131

குறள் 1131:

 

காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி
மு.வ உரை:
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.
கலைஞர் உரை:

காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை.


Kural 1131


Kaamam Uzhandhu Varundhinaarkku Ema
Madalalladhu Illai Vali

Kural Explanation: To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse

Leave a Comment