குறள் 1108

குறள் 1108:

 

வீழும் இருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு
மு.வ உரை:
காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.
கலைஞர் உரை:

காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.


Kural 1108


Veezhum Iruvarkku Inidhae Valiyidai
Pozha Padaaa Muyakku

Kural Explanation: To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze

Leave a Comment