குறள் 284

குறள் 284:

 

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்
மு.வ உரை:
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.
கலைஞர் உரை:

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.


Kural 284


Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan
Veeyaa Vizhumam Tharum

Kural Explanation: The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow

Leave a Comment