குறள் 283

குறள் 283:

 

களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்
மு.வ உரை:
களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
சாலமன் பாப்பையா உரை:
திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.
கலைஞர் உரை:

கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.


Kural 283


Kalavinaal Aagiya Aakkam Alavirandhu
Aavadhu Pola Kedum

Kural Explanation: The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase

Leave a Comment