குறள் 191

குறள் 191:

 

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
மு.வ உரை:
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.
கலைஞர் உரை:

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.


Kural 191


Pallaar Muniya Payanila Solluvaan
Ellaarum Ella Padum

Kural Explanation: He who to the disgust of many speaks useless things will be despised by all

Leave a Comment