குறள் 192

குறள் 192:

 

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
  நட்டார்கன் செய்தலிற் றீது
மு.வ உரை:
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
கலைஞர் உரை:

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.


Kural 192


Payanila Pallaarmun Sollal Nayanila
Nattaarkan Seidhalir Reedhu

Kural Explanation: To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends

Leave a Comment