குறள் 668

குறள் 668:

 

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்
மு.வ உரை:
மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.
கலைஞர் உரை:

மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.


Kural 668


Kalangaadhu Kanda Vinaikkan Thulangaadhu
Thookkang Kadindhu Seyal

Kural Explanation: An act that has been firmly resolved on must be as firmly carried out without delay

Leave a Comment