குறள் 480

குறள் 480:

 

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை 
வளவரை வல்லைக் கெடும்
மு.வ உரை:
தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.
சாலமன் பாப்பையா உரை:
பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.
கலைஞர் உரை:

தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்.


Kural 480


Ulavarai Thookkaadha Oppura Vaanmai
Valavarai Vallai Kedum

Kural Explanation: The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property

Leave a Comment