குறள் 448

குறள் 448:

 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
மு.வ உரை:
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
சாலமன் பாப்பையா உரை:
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.
கலைஞர் உரை:

குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.


Kural 448


Idippaarai Illaadha Emaraa Mannan
Keduppaa Rilaanung Kedum

Kural Explanation: The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him

Leave a Comment