குறள் 137

குறள் 137:

 

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி
மு.வ உரை:
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
சாலமன் பாப்பையா உரை:
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.
கலைஞர் உரை:

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.


Kural 137


Ozhukkaththin Eidhuvar Menmai Izhukkaththin
Eidhuvar Eidhaap Pazhi

Kural Explanation: From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace

Leave a Comment