குறள் 1286

குறள் 1286:

 

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை
மு.வ உரை:
காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.
கலைஞர் உரை:

அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.


Kural 1286


Kaanungaal Kaanen Thavaraaya Kaanaakkaal
Kaanen Thavaral Lavai

Kural Explanation: When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults

Leave a Comment