குறள் 1273

குறள் 1273:

 

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு
மு.வ உரை:
( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.
கலைஞர் உரை:

மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.


Kural 1273


Maniyil Thigazhtharu Noolpol Madandhai
Aniyil Thigazhvadhondru Undu

Kural Explanation: There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems

Leave a Comment