குறள் 1232

குறள் 1232:

 

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்
மு.வ உரை:
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.
சாலமன் பாப்பையா உரை:
பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!
கலைஞர் உரை:

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.


Kural 1232


Nayandhavar Nalgaamai Solluva Polum
Pasandhu Panivaarum Kan

Kural Explanation: The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved

Leave a Comment