குறள் 1121

குறள் 1121:

 

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலேயி றூறிய நீர்
மு.வ உரை:
மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!
கலைஞர் உரை:

இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.


Kural 1121


Paalodu Thenkalan Thatrae Panimozhi
Vaaleyiru Ooriya Neer

Kural Explanation: The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey

Leave a Comment