குறள் 1010

குறள் 1010:

 

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி 
வறங்கூர்ந் தனைய துடைத்து
மு.வ உரை:
புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது போலாம்.
கலைஞர் உரை:

சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.


Kural 1010


Seerudaich Chelvar Sirudhuni Maari
Varangoorn Thanaiyadhu Udaiththu

Kural Explanation: The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while)

Leave a Comment