குறள் 980

குறள் 980:

 

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்
மு.வ உரை:
பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.
கலைஞர் உரை:

பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும் பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.

Kural 980


Atram Maraikkum Perumai Sirumaidhaan
Kutramae Koori Vidum

Kural Explanation: The great hide the faults of others; the base only divulge them

Leave a Comment