குறள் 866

குறள் 866:

 

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்
மு.வ உரை:
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.
கலைஞர் உரை:

சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.


Kural 866


Kaanaa Chinaththaan Kazhiperung Kaamaththaan
Penaamai Penap Padum

Kural Explanation: Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure

Leave a Comment