குறள் 840

குறள் 840:

 

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
மு.வ உரை:
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.
கலைஞர் உரை:

அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.


Kural 840


Kazhaaakkaal Palliyul Vaiththatraar Saandror
Kuzhaaaththu Pedhai Pugal

Kural Explanation: The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed

Leave a Comment