குறள் 819

குறள் 819:

 

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
மு.வ உரை:
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.
கலைஞர் உரை:

சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்.


Kural 819


Kanavinum Innaadhu Manno Vinaiveru
Solveru Pattaar Thodarpu

Kural Explanation: The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams

Leave a Comment