குறள் 817

குறள் 817:

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்
மு.வ உரை:
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.
கலைஞர் உரை:

சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.


Kural 817


Nagaivagaiya Raagiya Natpin Pagaivaraal
Paththaduththa Kodi Urum

Kural Explanation: What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter

Leave a Comment