குறள் 810

குறள் 810:

 

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்
மு.வ உரை:
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.
சாலமன் பாப்பையா உரை:
பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.
கலைஞர் உரை:

பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.


Kural 810


Vizhaiyaar Vizhaiyap Paduba Pazhaiyaarkan
Panbin Thalaippiriyaa Thaar

Kural Explanation: Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriends

Leave a Comment