குறள் 772

குறள் 772:

 

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
மு.வ உரை:
காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.
சாலமன் பாப்பையா உரை:
காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.
கலைஞர் உரை:

வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.


Kural 772


Kaana Muyaleidha Ambinil Yaanai
Pizhaiththavel Yendhal Inidhu

Kural Explanation: It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest

Leave a Comment