குறள் 734

குறள் 734:

 

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
மு.வ உரை:
மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.
கலைஞர் உரை:

பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.


Kural 734


Urupasiyum Ovaa Piniyum Serupagaiyum
Seraa Thiyalvadhu Naadu

Kural Explanation: A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes

Leave a Comment