குறள் 660

குறள் 660:

 

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் 
கலத்துணீர் பெய்திரீஇ யற்று
மு.வ உரை:
வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.
கலைஞர் உரை:

தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.


Kural 660


Salaththaal Porulseidhae Maarththal Pasuman
Kalaththulneer Peidhireei Yatru

Kural Explanation: (For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water

Leave a Comment