குறள் 628

குறள் 628:

 

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன்
மு.வ உரை:
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.
கலைஞர் உரை:

இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.


Kural 628


Inbam Vizhaiyaan Idumpai Iyalpenbaan
Thunbam Urudhal Ilan

Kural Explanation: Declaring difficulties to be quite natural, Those who do not pursue life's pleasures will not suffer its sorrows.

Leave a Comment