குறள் 602

குறள் 602:

 

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
மு.வ உரை:
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.
கலைஞர் உரை:

குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


Kural 602


Madiyai Madiyaa Ozhugal Kudiyaik
Kudiyaaga Vendu Bavar

Kural Explanation: Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct

Leave a Comment